
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரதமர் என்ற மிகப் பெரிய, பொறுப்பான பதவியை ஏற்றிருக்கும் தாம் ஆதார அடிப்படையில்தான் பேசுவதாகவும் தமக்கு பொய்யைப் பரப்ப வேண்டிய அவசியம் இல்லையென்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதிபட குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நிலையை மிகையாகவும் குறைத்தும் மதிப்பிட்டுப் பேசவில்லை என்றும் அரசு இலாகாக்கள் தரும் புள்ளிவிவரங்கள், ஆய்வுகளின் அடிப்படையில்தான் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு ஆதரவு வேண்டுமென்பதற்- காக ஊழல் விவகாரங்களில் கண்ணை மூடிக் கொண்டிருக்கப் போவதில்லை என்றும் ஊழலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது விசாரணை உண்டு என்றும் செரோக்கில் உள்ள (Cherok To’ Kun) டு குன் எனுமிடத்தில் கேலரி பெஜுவாங்கில் பொது விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.



