
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியைக் குறைத்த பிரதமர் அன்வார் இப்ராஹிமை பெரிக்காத்தான் நாடாளுமன்றக் கொறடா Takiyuddin Hassan (தக்கியுடின் ஹசான்) கடுமையாகச் சாடியுள்ளார்.
மேம்பாட்டு நிதி தொகுதி மக்களுக்கு நேரடியாகச் சென்றடைவதால் அதனை குறைப்பது சரியான முடிவல்லவென்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சி எம்பிக்களைப் போன்றே மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, மேம்பாட்டு நிதியான 3 மில்லியன் 1.3 மில்லியனாகக் குறைக்கப்பட்டதாகப் பிரதமர் அறிவித்திருந்தார்.



