
🔊To listen to this news in Tamil, Please select the text.
பொதுத்தேர்தல் செலவினம் தொடர்பாக பெர்சத்துவின் 30 கோடி ரிங்கிட் வங்கிக் கணக்கை முடக்கிய எம்ஏசிசி விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பொதுத்தேர்தலில் பெரும் பணத்தைச் செலவழித்துத் தேர்தல் பரப்புரையை நடத்திய பக்காத்தான், தேசிய முன்னணி ஆகிய கூட்டணிகளின் செலவினத்தையும் எம்ஏசிசி விசாரணை செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் பரப்புரையில் பல இடங்களுக்கும் செல்ல அன்வார் ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்றும் அவருக்கு எந்த நிறுவனத் தலைவர்கள் பணத்தை வாரி வழங்கியுள்ளனர் என்பதையும் விசாரணை செய்ய வேண்டுமென Mohd Shukor Mustaffa (முகமட் ஷுக்கோர் முஸ்தாப்பா) வலியுறுத்தியுள்ளார்.



