
🔊To listen to this news in Tamil, Please select the text.
சேவைத் துறையின் 3 உட்பிரிவுகளான சலவை, பழைய இரும்பு வியாபாரம், பறவைக் கூடு தொழில் ஆகியவற்றிற்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
இத்துறைக்கான விண்ணப்பங்களை முதலாளிமார்கள் அமைச்சுக்கு அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் ஆள் பற்றாக்குறையை நிவர்த்திக்க 5 முக்கிய துறைகளுக்கு 5 லட்சம் அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அரசு இதற்கு முன்னர் அனுமதியளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



