
🔊To listen to this news in Tamil, Please select the text.
தம்மை அவதுறாக விமர்சித்தும், தவறான முறையில் பிரதமரானதாகவும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் வழக்குகளை சுமத்துவதாகவும் கூறிய பெண்டாங் எம்பி Awang Hashim (அவாங் ஹாஷிம்) மீது அன்வார் இப்ராஹிம் நிந்தனை வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அவாங் தம்மை களங்கப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் நிந்தனையான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாகவும் அவை உண்மைக்கு மாறானவை என்றும் கெட்ட நோக்கத்தோடு கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவாங் அம்மாதிரியான குற்றச்சாட்டை கூறுவதிலிருந்து தடை விதிப்பதோடு தமக்கு நேர்ந்த அவமரியாதைக்குத் தகுந்த இழப்பீடைத் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



