
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்தாண்டு மொத்தம் 624 பேர் 2012ஆம் ஆண்டு பாதுகாப்புக் குற்றங்களின் (சிறப்பு நடவடிக்கை) கீழ் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதில் 71 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, 401 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டு, 140 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதோடு, 12 பேரின் மீது இன்னமும் விசாரணை தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 18லிருந்து 69 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் ரவூப் பக்காத்தான் எம்பி Chow Yu Hui (சோவ் யு ஹுய்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.
இதனிடையே பொக்கா சட்டத்தின் வழி 132 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.



