
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெரிக்காத்தானில் இருக்கும் பெர்சத்துவும் பாஸ் கட்சியும் வாக்கு சேகரிக்கவும் மலாய் வாக்காளர்களைக் கவரவும் இனவாதத்தைப் பிரதானமாகப் பயன்படுத்திக் கொண்டதால்தான் 15ஆவது பொதுத்தேர்தலில் மலாய்க்காரர்களின் அபரிமிதமான வாக்குகளைப் பெற்றதாக பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி, ராமசாமி குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டணிக்கு பொதுவாக 50 விழுக்காடு மலாய்க்காரர் ஆதரவு மட்டுமே இருந்த வேளையில், இனவாதம் அவற்றிற்கு பெரிதும் கை கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியே இன வதத்தைக் கிளப்பி வருவதாக அக்கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் கூறுவது வடிகட்டிய பொய் என்றும் டாக்டர் ராமசாமி சாடினார்.



