
🔊To listen to this news in Tamil, Please select the text.
நெடுஞ்சாலை டோல் சாவடிகளை அகற்றப் போவதாக பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் கூறியது என்னவானது என சாலைப் போக்குவரத்து நிபுணர் Rosli Azad Khan (ரோஸ்லி அஸாட் கான்) கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களோடு அரசு கையெழுத்திட்ட உடன்பாடுகள் அதிகாரத்துவ ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்வதோடு நெடுஞ்சாலைப் பராமரிப்பை அரசே ஏற்று நடத்தினால் மக்களின் சுமை வெகுவாகக் குறையும் என அவர் கருத்துரைத்துள்ளார்.
இந்நிலையில், நெடுஞ்சாலைகளை அரசு எடுத்துக் கொண்டால், பராமரிப்பாளர்களுக்கு அரசு பெருந் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டுமென்பதால், உடன்பாட்டு ஒப்பந்தத்தை மக்களின் பார்வைக்கு வைக்க இது தகுந்த நேரமல்லவென பொதுப்பணித் துறை அமைச்சர் Alexander Nanta Linggi (அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி) தெரிவித்துள்ளார்.



