
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பதவி வகித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவற்றிற்கான சம்பளத்தையும் அலவன்ஸையும் நிதியமைச்சிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை என துணை நிதியமைச்சர் Ahmad Mazlan (அமாட் மஸ்லான்) மக்களவையில் தெரிவித்தார்.
ஜானா விபாவா பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் 67 திட்டங்களின் வழி 700 கோடி ரிங்கிட் கையாடல் நடந்துள்ளதாக சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மீதும் அவரது உதவியாளர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



