
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடற்படைக்குத் தேவையான 6 சிறு ரக போர்க் கப்பல்களுக்கு இது வரை 608 கோடி ரிங்கிட் செலுத்தப்பட்டிருந்தாலும் ஒரு கப்பல் கூட இன்னும் கட்டி முடிக்கப்படாமல், அதில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாகப் பரவலான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அது பற்றி மக்களவையில் பேசிய பிரதமர், அந்த முறைகேட்டு விசாரணை முழுமை பெறாமலும் துல்லியமாக இல்லை என்பதாலும், அதன் விசாரணை தொடர்வதாகவும் அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் காட்டாமல் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உறுதி கூறினார்.
இந்நிலையில் அந்த 6 போர்க் கப்பல்களையும் கட்டி முடிக்க இப்போது அதன் செலவினம் 1,145 கோடி ரிங்கிட் செலவாகும் என கணிக்கப்படுகிறது.



