
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிறார் மீதான பாலியல் குற்றங்கள் அதிகமாகப் பதிவாகி இருப்பதாகத் தமது கவலையைத் தெரிவித்துள்ளார் தலைமை நீதிபதி Tengku Tun Maimun Tuan Mad (தெங்கு துன் மைமுன் துவான் மாட்).
கடந்தாண்டு சிறார் மீதான 69 பாலியல் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவாகியிருப்பதாகவும் அதில் 18 குற்றங்களில் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு அம்மாநிலத்தில் பதிவாகிய 3,683 போதைப்போருள் வழக்குகளில் 72 வழக்குகள் மிகவும் கடுமையான குற்றங்களாக வகைப் படுத்தப்பட்டிருப்பதாக தெங்கு மைமுன் குறிப்பிட்டார்.
அதோடு, கோத்தா பாரு நீதிமன்ற வளாகத்தில் பதிவாகிய மொத்தம் 13,597 வழக்குகளில், 6,412 வழக்குகள் கிரிமினல் குற்றங்களாகவும் போதைப்பொருள் வழக்குகளாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.



