
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் எந்தக் கைதியும் எது சம்பந்தமாகவும் அறிவிப்புகளை வெளியிட அனுமதியில்லை என்ற விதிமுறை உள்ளதாகச் சிறைத் துறைத் தலைமை இயக்குநர் சுப்ரி ஹாஷிம் தெரிவித்தார்.
இந்நிலையில் தமது தொகுதியில் சேவையாற்ற தம்மை அனுமதிக்க வேண்டுமென்று கோரியிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அம்மாதிரி செய்ய அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் 15ஆவது பொதுத்தேர்தல் சம்பந்தமாக எந்தவொரு அறிக்கை, கடிதம் போன்றவற்றை அவர் வெளியிடவும் அனுமதிக்க முடியாது என்றும் சுப்ரி ஹாஷிம் தெரிவித்தார்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Kalsom Noordin (கல்சோம் நூர்டின்) ஏற்பாடு செய்த ‘Menjangkau Abad Dinding Penjara’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.



