
🔊To listen to this news in Tamil, Please select the text.
15ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ மிகுந்த பொருள் செலவில் தனது தேர்தல் பரப்புரையைச் செய்ததோடு நாடு முழுமையிலும் பார்க்கும் இடங்களில் எல்லாம் அதன் கொடிகளும் பதாகைகளும் அலங்கரிக்கப் பட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
அதற்கு பெரும் பணம் தேவைப்படும் என்பதால், அந்தப் பணம் அம்னோவுக்கு எப்படி வந்தது என்பது சந்தேகத்துக்குரியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே ஊழல் வழக்குகள் சார்வு செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் ஆளும் கூட்டணித் தலைவர்கள் புனிதர்கள் போல கருதப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பாயவில்லையே ஏன் என மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.



