
🔊To listen to this news in Tamil, Please select the text.
வாழ்க்கையை நடத்தப் போதுமான சம்பளம் வழங்கப்படாதால்தான் பலர் சாதாரண வேலை செய்வதிலிருந்து தவிர்ப்பதாக மலேசிய சோஷலிச கட்சியின்(பிஎஸ்எம்) அதிகாரி சிவரஞ்சனி மாணிக்கம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் ஜொகூரில் இருப்போர், காலை மூன்று மணிக்கே வேலைக்குச் செல்வதும் பலர் சாதாரண கூலி வேலை செய்ய வெளிநாடுகளுக்குச் செல்வதும் நாட்டில் குறைவான சம்பளம் தரப்படுவதால்தான் என அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம், நாட்டில் அதிகமானோர் வேலையில்லாது இருப்பதன் காரணம் என்னவெனில் அவர்கள் தங்களுக்குத் தோதான வேலையைத் தேடுவதுதான் காரணம் என மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.



