
🔊To listen to this news in Tamil, Please select the text.
பங்குச் சந்தையில் பதிவு பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் அரசியல் தலைவர்கள் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் பொதுத்துறை நிறுவனங்களில் நியமிக்கப்படாமல் அவர்கள் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட பிற நிறுவனங்களில் மட்டுமே நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இம்மாதிரியான நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றும் அவை தெனாகா நேஷனல், டெலிகோம் மலேசியா, மலேசியா ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் போலல்லவென அந்தோணி லோக் தெரிவித்தார்.



