
🔊To listen to this news in Tamil, Please select the text.
பல ஆண்டுகளாக தேசிய முன்னணிக்கு பெரும் ஆதரவாக இருந்து செயல்பட்டு வந்திருக்கும் மஇகாவுக்கு வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெறும் 4 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என தேசிய முன்னணி முடிவெடுத்துள்ளதாகச் செய்தி பரவி வருகிறது. அது பற்றிக் குறிப்பிட்ட சமூகத் தலைவர்கள், அந்த முடிவானது சமூகத்தை உதாசீனம் செய்யும் போக்கு என விமர்சித்துள்ளனர். இதற்கு முன்னர் மஇகா 9 நாடாளுமன்ற, 19 சட்டமன்றத் தொகுதிகளை வெற்றி பெற்ற பின்னர், கடந்த இரு பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணியின் சரிவைத் தொடர்ந்து அதுவும் தோல்வியை அடைந்து வந்துள்ளது. தற்போதைய நிலையில், தொகுதிகளைக் கண்டிப்புடன் கேட்டு வாங்கி, போட்டியிட முடியாத நிலையில் மஇகா இருப்பதால், இதனை அது எப்படி கையாளப் போகிறது என்பதை சமூகம் உற்று நோக்கி வருகிறது.



