
🔊To listen to this news in Tamil, Please select the text.
புதிய பிரதமர் பதவியேற்றால் எம்ஏசிசியின் தலைவரை மாற்றியே தீர்வார் என்ற தப்பான கருத்தினைத் தவிர்க்கவே ஊழல் தடுப்பு ஆணையர் அஸாம் பாக்கியை தாம் மாற்ற எண்ணம் கொண்டிருக்கவில்லை என அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்தார்.
மேலும் எம்ஏசிசி ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதால் தற்போதைக்கு அவரை மாற்றத் தேவையில்லை என்று தாம் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும், இந்தப் பிரச்சினையைத் தாம் நாடாளுமன்ற தெரிவிக் குழுவின் முடிவுக்கே விட்டு விடுவதாகத் தெரிவித்த அவர் எம்ஏசிசியை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வர பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



