
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரச மலேசிய போலீஸ் படையின் 216வது போலீஸ் தினத்தை முன்னிட்டு வடகிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் இந்து அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.
காப்பார், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் காவல் துறையினர் தங்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர்.

அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடவும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குரிய மனவுறுதியைப் பெறவும் இறைவனை வேண்டி இந்த சிறப்பு வழிபாட்டினை அவர்கள் நடத்தினர்.



