
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் உள்ள 13 லட்சம் இடைநிலைப் பள்ளிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 43,019 பேர் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளையில், தொடக்கப் பள்ளிகளில் இரண்டு மில்லியன் மாணவர்களிடையே மேற்- கொள்ளப்பட்ட பரிசோதனையில் 341 பேர் மட்டுமே புகை பிடிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலவை உறுப்பினர் என். பாலசுப்ரமணியம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சுகாதாரத் துணையமைச்சர் Lukanisman Awang Sauni (லுக்கானிஸ்மான் அவாங் சவுனி) புகை பிடிக்கும் மாணவர்களுக்கு அது சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் புகை பிடிக்காத மாணவர்களுக்குப் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கப்பட்டிருப்- பதாகவும் தெரிவித்தார்.



