
🔊To listen to this news in Tamil, Please select the text.
நோன்பு மாதத்தில் மக்களுக்கு உதவும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு உரிய மானியம் விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக பாஸ் கட்சி துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆளுந்தரப்பினருக்கு வழங்குவதைப் போல எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கும் சமமான நிதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள துவான் இப்ராகிம், இதன் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஸைனுடின், கோத்தா பாரு எம்பி தக்கியுடின் ஹசான், புத்ராஜெயா உறுப்பினர் ரட்சி ஜிடின் ஆகிய மூவரும் அரசத் தரப்பினரை விரைவில் சந்திக்க இருக்கின்றனர்.
இதன் தொடர்பில் ஏற்கெனவே பிரதமர் உறுதி அளித்திருக்கிறார். இது, விரைவில் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் இப்ரகிம் தெரிவித்துள்ளார்.



