
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்கு மாநிலத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கும் ஊராட்சிமன்ற-நகர்மன்ற பணியாளர்களுக்கும் நோன்புத் திருநாள் உதவி நிதியாக வெ.1,500 அல்லது ஊதியத்தில் முக்கால் பங்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின்படி, ஏப்ரல் 17-ஆம் நாள் அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளா மாநில முதல்வர் சௌ கான் இயூ, இதற்காக 10.95 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.



