
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோவிட் தொற்று காலத்தின்போது தைப்பூசத்தை நடத்துவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினால் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் ராமசாமிக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கை மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ் .மோகன் ஷான் மீட்டுக்கொண்டார். இந்த விவகாரம் குறித்து தீவிரமாக பரிசீலித்த பின் தமது கட்சிக்காரர் வழக்கை தொடரும் திட்டத்தை கொண்டிருக்கவில்லையென மோகன் ஷான்னின் வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் நீதித்துறை ஆணையர் Ros Mawar Rozain னிடம் தெரிவித்தார். இந்த வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டதை ராமசாமியின் வழக்கறிஞர் Shamsher sing கும் இன்று உறுதிப்படுத்தினார். இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெறவிருந்தது. மலேசிய இந்து சங்கமும் மோகன் ஷானும் கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இந்த வழக்கு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
