
🔊To listen to this news in Tamil, Please select the text.
இளைஞர்கள் பொதுவாழ்விற்கு வருவதாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டாலும், அவற்றுக்கான அடித்தாளம் சீராகவும் செம்மையாகவும் இருந்தால்தான் அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும் என்பதால், தன்னுடைய தலைமையிலான மதானி அரசு இளைஞர்களுக்கான மேம்பாட்டில் முழு அக்கறை கொண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் அமைச்சரவை மட்டத்திலேயே ஒரு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இக்குழு, இளைய சமுதாயத்தில் குரலாக அமைச்சரவையில் பிரதிபலிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகத்தின் தாக்கத்திற்கு முழுமையாக ஆட்பட்டுவிடாமல், நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமை உணர்வுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் இளைய சமுதாயத்திற்கு நினைவூட்டி உள்ளார்.
