
🔊To listen to this news in Tamil, Please select the text.
வர இருக்கும் சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் தேசிய முன்னணி அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்துள்ளார்.
இந்த இரு மாநிலங்களிலும் தேசிய முன்னணிக்கு நீண்ட காலமாகவே அடிப்படையான கட்டமைப்பு இருக்கிறது. அதன் அடைப்படையில், நம்பிக்கைக் கூட்டணி சார்பில் வெல்லக் கூடிய சாத்தியம் இருக்கும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் இதன் தொடர்பில் நம்பிக்கைக் கூட்டணி தேசிய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்றும் இந்த இரு மாநிலங்களுக்கான பிகேஆர் தலைவருமாகிய நிக் நஸ்மி மேலும் தெரிவித்துள்ளார்.



