
மலேசிய கால்பந்து சங்கம் நடத்தும் துன் ஷரிபா கிண்ண காற்பந்துப் போட்டியில் முதன் முறையாக மலேசிய இந்திய பெண்கள் அணி காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டிக்காக ஒரு பலம்வாய்ந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு இந்திய கால்பந்து சங்கத்தலைவர் ஸ்ரீசங்கர தெரிவித்தார்
இப்போட்டியில் அதிரடி படைக்க தலைசிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
இதனிடையே தேசிய அளவில் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் மலேசிய இந்திய பெண்கள் அணி சாதனை படைக்க வாழ்த்துவதாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி தெரிவித்தார்.
மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து குழுவுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.



