
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூரின் புதிய மந்திரிபுசார் வெள்ளிக்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் மந்திரிபுசார் பதவியை ஏற்பவரின் பெயர் நாளை சிலாங்கூர் சுல்தானின் அனுமதிக்காக அவரிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. மாநில அரசாங்கத்தை பக்காத்தான் ஹராப்பான் நிலைநிறுத்திக் கொண்டால் ஒற்றுமை அரசாங்கம் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியை தொடர்ந்து மந்திரிபுசாராக நியமிக்கும் என இதற்கு முன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார். இதனிடையே அமிருடின் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அவருக்கு பதில் மந்திரிபுசாராக பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் Dr Fahmi Ngah நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



