
🔊To listen to this news in Tamil, Please select the text.
வரும் எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு கோலாலம்பூர் கல்வி புத்தாக்க ஆன்மா இயக்கம் மற்றும் கோலாலம்பூர் செத்திய வங்சா இந்திய மேம்பாட்டு கழகம் இணைந்து கருணைக்கு ஒரு கலை இரவு எனும் சொக்க வைக்கும் பழம் பாடல்கள் கலை நிகழ்ச்சி நடத்துகின்றது. தலைநகர் சோமா பேரரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 20 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. கூட்டரசு மலேசியா இந்திய காங்கிரஸ் தலைவர் ராஜா சைமன் சிறப்பு வருகை புரிவார். கலைஞர் புருஷோத்தமன் இசை மேற்பார்வையில் நாட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் பாடல்களை பாடி மகிழ்விப்பர். காட்சியும் காணமும் அங்கமும். உண்டு இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து ஆதரவ வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர் அழைப்புகள் வேண்டுவோர் 017-2575515 என்ற எண்ணில் இரா கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொள்ளலாம்
