
🔊To listen to this news in Tamil, Please select the text.
ப்போவிற்கு அருகே ஒரு ஹோட்டலின் 13ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் ஆடவரின் உடலை போலீசார் கண்டுப்பிடித்தனர். 40 வயதுடைய அந்த ஆடவர் உள்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இன்று காலை மணி அளவில் தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் சென்றதாக பேரா தீயணைப்பு மீட்புக் குழுவின் நடவடிக்கை பிரிவுக்கான துணை இயக்குனர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார். அந்த ஆடவரின் உடல் ஆறாவது மாடியில் சிக்கிக்கொண்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவர் மாண்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.



