33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பாலஸ்தீன மக்களுக்கு மலேசியா துணை நிற்கும்: பிரதமர்

🔥 Views : 8
👁 Reading Now : 52

🔊To listen to this news in Tamil, Please select the text.

பாலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமை, அடக்குமுறை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை  பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த அநீதியின் விளைவாக, நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பலியாகியுள்ளன என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காசா பகுதியில் தற்போதைய வன்முறைக்கான மூல காரணங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பாலஸ்தீனியர்களுக்குரிய இடங்களை நீண்டகால சட்டவிரோத ஆக்கிரமிப்பு, முற்றுகை, துன்பம், அல்-அக்ஸாவை இழிவுபடுத்துதல் என்று பலவிதங்களில் ஆக்கிரமிப்பாளராக இஸ்ரேல் செயலாற்றி வருவதை சொல்லி மாளாது. இஸ்ரேல் தங்கள் அரசியலுக்காக பலஸ்தீனர்களை பலியாக்கி வருகின்றது என்று வெளியுறவு அமைச்சகம்  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

இந்த நெருக்கடியான நேரத்தில், மேலும் உயிரிழப்புகள், துன்பங்கள்,  அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மத்திய கிழக்கின் சமீபத்திய வன்முறைகள் குறித்து மலேசியா கவலைப்படுகிறது.

சர்வதேச அமைதி, பாதுகாப்பைப் பேணுவதற்கான அதன் சாசனம், கட்டாயமான பொறுப்பின்படி செயல்படுமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வாரியத்தை மலேசியா வலியுறுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles