
🔊To listen to this news in Tamil, Please select the text.
அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி டிபிகே எல் அலுவலகத்தில் தத்துவ கலைவாணர் வியாபாரிகளுடன் சென்று மகஜர் கொடுத்தார். அவர் கூறும் போது பாகிஸ்தான் வங்காளதேசி இந்தியா மற்றும் பல நாடுகளில் இருந்து வந்து பிரிக்பீல்ட்ஸ், செந்தூல், ஜலான் இப்போ பகுதிகளில் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உள்நாட்டு வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவர்கள்தான் இங்கு வியாபாரம் செய்ய வேண்டும். இதை தவிர்த்து அந்நிய நாட்டவர்கள் எல்லா சந்தையிலும் வியாபாரம் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிபிகே எல் நிர்வாகமும் கடைகளுக்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்நாட்டு வியாபாரிகளுக்கு தீபாவளி நேரத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்
