
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஞாயிறு 29 ஆம் தேதி கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய உருமி மேள இசை இயக்கத்தில் ஏற்பாட்டில்
தமிழர் திருநாள் 3.0 நிகழ்சியில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்கள். அதோடு கோலாசிலாங்கூர் தோட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது.
அதிர்ஷ்ட குலுக்கில் வாயிலாக பத்து பேருக்கு தங்கம் மூக்குத்தி வழங்கப்பட்டது.
தோரணம் பின்னுதல் ,பூ கட்டுதல், வர்ணம் தீட்டுதல்,சட்டி உடைத்தல் போட்டிக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக செய்வதற்கு பெரும் ஆதரவு வழங்கியது மலேசிய சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் பொறுப்பதிகாரி Datin Shalida.நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார் அதோடு ஆலய தலைவர் திரு கண்ணதாசன் அவர்களும் கலந்து கொண்டார்கள் இயக்கத்தின் தலைவர் திரு சிவா , மற்றும் அன்புள்ள கவிமாறன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இசை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக செயலாற்றினார்கள் மாலை 3.00 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சரியாக 7.15க்கு நிறைவு பெற்றது. வந்து பொதுமக்கள் அனைவருக்கும் உணவுகளும் வழங்கப்பட்டது.
