🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியாவிலுள்ள இந்திய மற்றும் சீன சமூகத்தினரின் விசுவாசம் தொடர்பாக டாக்டர் மகாதீர் வெளியிட்ட அறிக்கை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் தெரிவித்திருக்கிறார். இந்த வெள்ளிக்கிழமையன்று பெரிக்காத்தான் நேசனல் தலைவர்களுடன் கூட்டத்தில் இதுகுறித்து தாம் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் அவர் கூறினார் . நாம் மலேசியாவில் பிறந்து இதர சமூகங்களைப்போல் சட்டத் திட்டங்களை மதித்து நடக்கிறோம். அப்படியிருக்கும் போது இந்தியர்களும் சீனர்களும் இந்நாட்டின் மீது விசுவாசமாக இல்லையென்று மகாதீர் கூறியிருப்பது நியாயமானதாக இல்லையென டொமினிக் லாவ் தெரிவித்தார்.
