
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்கு மாநிலம், நிபோங் திபால், கலிடோனியாத் தோட்டத்து பாட்டாளிக் குடும்ப வரிசையில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த தாக்ஷாயினி அருட்செல்வன் என்னும் மாணவி, ஏட்டு பாடங்களில் ‘ஏ’ அடைவு நிலையும் ஒரு பாடத்தில் ‘பி+’ நிலையும் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
நிபோங் திபால், மெத்தடிஸ்ட் இடைநிலைப் பள்ளி மாணவியான இவர், கலிடோனியாத் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளிகளான ‘நினைவில் வாழும்’ நடேசன்-நாகம்மாள் இணையரின் கொள்ளுப் பெயர்த்தியும் இரா.சந்திரா-அருட்செல்வன் இணையரின் மகளுமாவார்.
2023 மலேசியக் கல்விச் சான்றிதழ்-எஸ்பிஎம் தேர்வில் சிறந்த அடைவு நிலையை எட்டிய தாக்ஷாயினி, சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியப் பெருமக்களால் சிறப்பிக்கப்பட்டார்.
