
🔊To listen to this news in Tamil, Please select the text.
140 கஞ்சா செடியை வைத்திருந்த பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான யாசின் சுலைமானுக்கு 16 கசையடிகளுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபது டத்தோ நோர்ஷாரிடா அவாங் இத்தீர்ப்பை அறிவித்தார்.
யாசின் சுலைமான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எதிர்கொண்ட மூன்று போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
48 வயதுடைய யாசின் சுலைமான் பேரா உலு கிந்தா பஹாகியா மருத்துவமனையில் வைக்க உத்தரவிடப்படுவதற்கு முன்பு, அவரை காவல்துறையினரால் கைவிலங்கிடப்பட்டு நேரடியாக காஜாங் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.



