

🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசிய மக்கள் சக்தியின் 16வது மாநாடு இன்று கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் பசுபிக் ஹோட்டலில் உள்ள பால் ரோமில் ரூமில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சிறப்பு வருகையாக மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், கிம்மா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மைபிபிபி கட்சியின் தலைவர் டத்தோ லோக பாலா மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர்களும் இந்நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இங்கு கட்சியின் தலைவர் தனேந்திரன் பேசும் பொது கட்சியை மேலும் பலப்படுத்தி வலுவாக இருப்போம். இங்கு வந்த அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மதானி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு மக்கள் சக்தி கட்சியின் ஆதரவு அப்போதும் உண்டு என அவர் தெரிவித்தார்.

