
செய்தி படங்கள் : எம்.முருகன்
ஜலான் ஈப்போ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரியை முன்னிட்டு கொழு வைத்தல், சுவாமி அலங்காரம் போன்றவை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று மூகாம்பிகை அலங்கார உற்சவம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு வருகையாக மனிதநேய மாமனி ரத்தினவள்ளி அம்மையார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவருக்கு சிறப்பும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

