
மக்காவ் மோசடிக் கும்பலுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களை உள்நாட்டு வருமான வரி வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி மே 27ஆம் தேதி வரை நிகழ்ந்த 1 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி சம்பந்தப்பட்ட 556 மோசடி சம்பவங்கள் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உள்நாட்டு வருமானம் வரி வாரியம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக இக்கும்பலின் உறுப்பினர்கள் பொது மக்களை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தங்களை உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொள்வார்கள் என்று வருமான வரி வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது.
