
இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தும் திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் 20 கோடியை ஒதுக்கி இருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி
தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் தடுப்பூசி பெறுவதை உறுதி செய்யப்படும்.
இளம் தலைமுறையினர் 18 வயதை அடையும் போது அவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக போதுமான அளவு தடுப்பூசி கைவசம் இருப்பதை உறுதி செய்யப்படும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவ துறை சார்ந்தவர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
