
சாலை விபத்தில் காயமுற்ற லெட்சுமி என்ற மாதுவுக்கு 3,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது.
பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாய் கிம் சார்பில் இந்நிதி வழங்கப்பட்டதாக பண்டார் பாரு கிள்ளான் கிராமத் தலைவர் அருள்நேசன் ஜெயபாலன் தெரிவித்தார்.
டத்தோ தெங் சாய் கிம் சிறப்பு அதிகாரி ஜெயபாலன் இந்நிதியை நேரில் லெட்சுமியிடம் வழங்கினார்.
