
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஆட்சிக் குழு உறுப்பினர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் வரை இவர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்றார். இதனிடையே நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 50,000 மக்களுக்கு உணவு கூடைகள் வழங்க 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
