
இவ்வாண்டு இறுதியில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சீ விளையாட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் நோய்த்தொற்று தாக்கத்தினால் பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வியட்நாம் சீ போட்டியை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் ஒத்திவைக்க முடிவு காணப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு மலேசியா உட்பட 8 நாடுகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. வரும் நவம்பர் மாதத்தில் இந்த போட்டியை திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டுமென மலேசியா உட்பட எட்டு நாடுகள் கேட்டுக் கோண்டுள்ளன.
