
நாட்டில் சமையல் எண்ணெயின் விலை நாளுக்கு நாள் உயர்வு ரிம 30.00 வெள்ளியை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஜோகூர் மாநில ஜசெக சந்திர சேகரகன் ஆறுமுகம் எச்சரித்துள்ளர்.
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக விளங்கும் இந்த சமையல் எண்ணெயின் விலையையும் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் தார்மிக கடமை ஆகும். எண்ணெய் விலை விவகாரத்தில் கை நழுவும் போக்கை அரசு கைவிடவேண்டும்.

5 கிலோ சமையல் எண்ணெய் விலை தற்பொழுது ரிம 29.90 தொட்டுவிட்டது .இது கடந்த நோன்பு காலத்தில்
ரிம 23.90 முதல் ரிம 27.90 வரை இருந்த விலையை விட ஐந்து வெள்ளியாக தற்போது விலை அதிகமாக உயர்ந்துள்ளது என்பதை அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
