
அடுத்த மாதம் தொடங்கும் தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் படி மலேசியாவுக்கு ஜப்பான் அழைப்பு விடுத்துள்ளது.
நோய்த்தொற்று அதிகம் உள்ள நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக கூறப்படுவதை ஜப்பான் அரசாங்கம் மறுத்துள்ளது.
தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மலேசியா பங்கேற்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் மலேசியா இடம்பெற வேண்டுமென தோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பட்டு குழு அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய திருவிழா என்று வர்ணிக்கப்படும் தோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
