
கோவிட்-19 நோய்த் தொற்றால் சிலாங்கூரில் உயிழந்தவர்களுக்கு மரண சகாய நிதியாக வெ. 1,000 வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
இந்நோக்கத்திற்காக 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வெ. 500 சிறப்பு உதவி நிதி
ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த உதவித் தொகை திட்டத்திற்காக வெ. 600,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஹிஜ்ரா சிலாங்கூர் கடன் தொகையை திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம்
– ஒன்றரை மாதங்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டத்தின் மூலம் ஹிஜ்ரா சிலாங்கூர் அமைப்பிடம் கடன் பெற்ற சுமார் 40,000 பேர் பயன்பெறுவர்.
1 கோடியே 13 லட்சத்து 50 வெள்ளியை இந்த கடன் ஒத்தி வைப்புத் திட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
