
இன்று நாடு தழுவிய அளவில் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் இவ்வாண்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகச் சிறப்பாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே, சிலாங்கூர் பாங்கி வட்டாரத்தைச் சேர்ந்த தர்மசேனர் தேவேந்திரன் மொத்தம் 11 ஏ பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
காஜாங் ஜாலான் புக்கிட் இடைநிலைப் பள்ளியில் பயின்ற இவர் தமிழ், தமிழ் இலக்கியம் உட்பட அனைத்து பாடங்களில் முழுத்தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்கி தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை கற்ற இவரின் வெற்றிக்கு பெற்றோரா தேவேந்திரன்- உமாதேவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருந்தனர்
