
பிப்ரவரி 21 திகதி நடைபெறவுள்ள உலக தாய்மொழி நாள் அறிமுக விழாவில் ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தேசிய அதிகாரப்பூர்வமாக வருகின்ற கலந்து கொண்டு உலக தாய்மொழி நாள் விழாவினை திறந்து வைக்க உள்ளார். இந்த ஆண்டு உலக தாய்மொழி தின கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழா கோலாலம்பூர் சிலாங்கூர் சீன பல்நோக்கு மண்டபத்தில் இரண்டு முக்கிய நிகழ்விகளுடன் நடைபெற உள்ளது. உலக தாய்மொழி தினத்தின் அறிமுக விழா வருகின்ற 21 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. கண்காட்சி பரிசளிப்பு விழா சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி இரண்டு மணி வரை நடைபெறும் விழாவில் 180க்கு மேற்பட்டோ கலந்து கொள்ள உள்ளனர். பரிசளிப்பு விழாவிற்கு 500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு போட்டியில் சிறப்பிக்க உள்ளனர். தமிழ் அறவாரியம், டி எஃப் எம் கலாச்சார மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் வாரிய கூட்டமைப்பு, சீன பள்ளிகளின் மேலாண்மை வாரியம், ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் ஏற்பட்டார்கள் கூறினார்கள்.
