
பேராக் மாநில தலைநகரமான ஈப்போ அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் மலாய் மொழியில் அறிவிப்பு பலகைகள், விளம்பரங்கள் இல்லாத நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்ய பேராக் மாநில அரசாங்கம் தயாராக உள்ளது
இதனை பேராக் மாநில வீடமைப்பு, ஊராட்சி துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சான்ட்ரியா எங் ஷெ சிங் கூறினார்
1963/67 தேசிய மொழி சட்டத்தின் கீழ் விதிமுறைகள் முறையாக பின்பற்றபடாமல் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்
கூட்டரசு அரசியலமை சட்டத்தின் படி மலாய் மொழி நாட்டின் தேசிய மொழியாக உள்ளது. இதனால் மலாய் மொழிக்கு நாட்டு மக்கள் அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மலாய் மொழியில் அறிவிப்பு பலகைகள், விளம்பரங்கள் இல்லை என்பதை மாநில அரசாங்கம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்



