
மீண்டும் நாட்டை வழி நடத்த விருப்பம் கொண்டிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். அப்படியானால் இதற்கு முன்னர் அவர் ஏன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்று பேரா தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லி காங் கேள்வி எழுப்பினார்.
மீண்டும் நாட்டை வழி நடத்த தயார் என்று அவர் கூறுகிறார். ஆனால் 2020 ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அவர் பிரதமர் பதவியை எதற்காக ராஜினாமா செய்தார் என்று கேட்டார்.
பாக்காத்தான் ஹரப்பான்
கூட்டணியிலிருந்து பெர்சத்து விலகியதை அடுத்து மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
