
எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொலைபேசி மூலம் என்னை அழைத்தார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது உறுதிப்படுத்தினார்.
அந்த உரையாடலில், அவரும் பி.கே.ஆர். தலைவரும் நாட்டின் தற்போதைய நெருக்கடி பற்றி விவாதித்ததாக அவர் சொன்னார்.
இருப்பினும், பிரச்சினையைத் தீர்க்க அன்வாரால் எதையும் பரிந்துரைக்க முடியவில்லை என்று அவர் கூறினார்..
மே 28ஆம் தேதி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துன் டாக்டர் மகாதீரை அழைத்தார் என்று கூறப்படுகிறது.
