
பண்டார் பாரு கிள்ளான் கிராமத் தலைவர் அருள்நேசன் ஜெயபாலன் தனது வட்டாரத்திலுள்ள வசதி குறைந்த மக்களுக்கு பெருமளவில் உதவிகளை புரிந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக நோய்த்தொற்று தாக்கத்தினால் வருமானம் இழந்த மக்களுக்கு உணவு கூடைகளையும் காய்கறிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று அவர் பல குடும்பங்களுக்கு இலவசமாக காய்கறிகளை வழங்கி உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
